Log in
Similar topics
Latest topics
Social bookmarking
Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website
Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website
Support
மதுரை சம்பவம்
Page 1 of 1
மதுரை சம்பவம்
தாதாக்களை ஒழிக்க காதலைப் பயன்படுத்தும் ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் கதை.
"செய்கிற தொழில் தப்பாக இருந்தாலும் போகிற வழி நல்ல வழியாக இருக்க வேண்டும்" என்ற கொள்கை உடையவர் ராதாரவி. மதுரை ஆட்டுத் தொட்டியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், சாராயம் காய்ச்சுவது, போதைப் பொருள் விற்பது எனத் தொழில் செய்து வந்தாலும், பொதுமக்களுக்கு நன்மை செய்யும் பெரியவர்.
ஆளும்கட்சி எம்.பி.யான "காதல்" தண்டபாணிக்கும், ராதாரவிக்கும் இடையில் பகை இருந்து வரும் நேரத்தில் "காதல்" தண்டபாணியின் மைத்துனர் செய்யும் பாலியல் வன்முறையை தட்டி கேட்கிறார், ராதாரவியின் மகன் ஹரிகுமார். அதற்கு பழி வாங்க தனது அடியாட்களை அழைத்து வந்து ஹரிகுமாரை கொல்ல "காதல்" தண்டபாணி முயற்சிக்கும்போது தன் மைத்துனரை, ஹரிகுமார் கொன்று விடுகிறார்.
உடனே மைத்துனரை கொன்ற ஹரிகுமார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போலீஸ் அதிகாரியான ராஜ்கபூரை மிரட்டுகிறார் "காதல்" தண்டபாணி. ராதாரவியிடம் மாமூலை வாங்கும் ராஜ்கபூர், அவரிடம் கெஞ்சி மகன் ஹரிகுமாரை சரண்டராக சொல்கிறார். அதற்கு மறுக்கிறார் ராதாரவி. இதனால் அவமானப்படும் ராஜ்கபூர், அவர்கள் வசிக்கும் ஏரியாவில் ஒரு பெண் இன்ஸ்பெக்டரை (அனுயா) நியமித்து அவர் மூலம் ராதாரவியையும், அவரது இடதுகரமாக உள்ள சுதாகர் வசந்தையும், ஹரிகுமாரையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ள வழிவகை செய்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் அனுயா, ஹரிகுமாரிடம் காதல் நாடகம் நடத்தி, நல்லவள் போல் நடித்து ஹரிகுமாரின் மாமா சுதாகர் வசந்த், தந்தை ராதாரவி ஆகியோரை என்கவுன்டரில் போட்டுத் தள்ளுகிறார். இது தெரியாமல் காதல் மயக்கத்தில் இருக்கும் ஹரிகுமார் என்கவுன்டரிலிருந்து தப்பித்து, எப்படி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.
ஹரிக்குமார் அதிரடி நாயகனாக ஆக்ஷனில் தூள் பரத்துகிறார். "தூத்துக்குடி" உள்ளிட்ட அவரது முந்தைய படங்களை காட்டிலும், நடை - உடை - பாவனை எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம். எதிரியின் சாராய உறலை எரித்து அடியாட்களை துவம்சம் செய்யும் ஆரம்ப காட்சியே அட்டகாசம்.
ஹீரோயின் அனுயா... அட்ரா சக்கை ரகம். சிவா மனசுல சக்தியில் குல்பி ஐஸாக கண்களுக்குள் குளித்தவர், காக்கி ட்ரெஸ்ஸில் ராக்கெட்டாக சிறுகிறார். முதிர்ச்சியான நடிப்பில் மொத்த கை தட்டலும் அவருக்குத்தான். ஆனால் காதலித்த பாவத்திற்கு ஒரு ராத்திரியை அனுபவிப்போமே என்ற அவரது லாஜிக்தான் உறுத்தல்.
கார்த்திகாவுக்கு அதிக வேலையில்லை. ஹரிகுமாருடன் பைக்கில் ஒட்டி உரசிச் செல்ல ஆசைப்பட்டு, அதுவும் அனுயா வந்த பிறகு நிராசையாகி விடுகிறது. ஆனந்த்பாபு கூலிக்கு கொலை செய்து, திருப்புமுனைக்கு உதவுகிறார்.
ஆலமரத்தானாக வரும் ராதாரவி, இதைவிட ஒரு சிறந்த நடிப்பை வேறு எந்த படத்திலும் கொடுத்ததில்லை. தன்னை தேடி போலீஸ் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் அவரது பார்வையும் கண்களும் வெளிப்படுத்தும் நடிப்பில் காட்டுகிற சங்கதிகள் ஏராளம். கடைசியில் அந்த என்கவுன்டர் காட்சியில் கூட விலகாத கம்பீரம் காட்டி சபாஷ் போட வைக்கிறார்.
"ஐ யாம் தாமஸ்" என என்ட்ரி ஆகும் ஒவ்வொரு சீனிலும் காமெடியில் எகிறும் சந்தானபாரதி, இப்போதுதானே உள்ளே போனோம் அதுக்குள்ள வெளியே வர்றோம் என உள்ளே வெளியே ஆடும்போது தியேட்டர் சிரிப்பால் அதகளமாகிறது.
"காதல்" தண்டபாணியின் பாய்ச்சல், ராஜ்கபூர், பொன்னம்பலத்தின் குள்ளநரித்தனம், சுதாகர் வசந்தின் கம்பீரம், சந்தானபாரதியின் நகைச்சுவை, சுடுகாட்டு மண்டையனின் (வினாயகம்) கலகலப்பு ஆகியவை ரசிக்கத்தக்கது.
இறைச்சி கூடத்தில் கட்ட பஞ்சாயத்து கொலைகள், கடத்தல் பிசினஸ் என்று கதைக்களமே வித்தியாசமாய் இருக்கிறது இயக்குனர் யுரேகாவின் முயற்சியால்.
ஹரிக்குமார், தன் அப்பாவைக் கொன்ற அனுயா பற்றி தெரியாமலேயே அவருடன் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும்போது, அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.
ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காகவே இந்த சமூக விரோத செயல்களை செய்வதாக ராதாரவி தரப்பிற்கும், தப்பிற்கும் நியாயம் கற்பித்திருப்பது மட்டும் என்னதான் சினிமாத்தனம் என்றாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல் நடுரோட்டில் முத்தம் கொடுத்தால் எந்தப் பெண்ணாவது காதலிப்பாளா? ஆனால் ஹீரோயின் அனுயா காதலிக்கிறார். இப்படி கதையில் சில இடங்களில் லாஜிக்தான் இடியோ இடியென இடிக்கிறது.
என்கவுன்டர் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். இவரின் கேமராவில் மதுரை மண் வாசம் படம் முழுவதும் வீசுகிறது. "கண்ணழகா கண்ணழகா...", "லந்துப் பண்ணுவோம்..." என்ற பாடலை முணு முணுக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜான்பீட்டர். எடிட்டர்தான் நீளத்தை குறைக்க மனசில்லாமல் விட்டிருக்கிறார்.
அதிரடி ஆக்ஷனில் காதலை புகுத்தி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியதற்காக இயக்குனர் யுரேகாவை பாராட்டலாம்.
"செய்கிற தொழில் தப்பாக இருந்தாலும் போகிற வழி நல்ல வழியாக இருக்க வேண்டும்" என்ற கொள்கை உடையவர் ராதாரவி. மதுரை ஆட்டுத் தொட்டியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அவர், சாராயம் காய்ச்சுவது, போதைப் பொருள் விற்பது எனத் தொழில் செய்து வந்தாலும், பொதுமக்களுக்கு நன்மை செய்யும் பெரியவர்.
ஆளும்கட்சி எம்.பி.யான "காதல்" தண்டபாணிக்கும், ராதாரவிக்கும் இடையில் பகை இருந்து வரும் நேரத்தில் "காதல்" தண்டபாணியின் மைத்துனர் செய்யும் பாலியல் வன்முறையை தட்டி கேட்கிறார், ராதாரவியின் மகன் ஹரிகுமார். அதற்கு பழி வாங்க தனது அடியாட்களை அழைத்து வந்து ஹரிகுமாரை கொல்ல "காதல்" தண்டபாணி முயற்சிக்கும்போது தன் மைத்துனரை, ஹரிகுமார் கொன்று விடுகிறார்.
உடனே மைத்துனரை கொன்ற ஹரிகுமார் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போலீஸ் அதிகாரியான ராஜ்கபூரை மிரட்டுகிறார் "காதல்" தண்டபாணி. ராதாரவியிடம் மாமூலை வாங்கும் ராஜ்கபூர், அவரிடம் கெஞ்சி மகன் ஹரிகுமாரை சரண்டராக சொல்கிறார். அதற்கு மறுக்கிறார் ராதாரவி. இதனால் அவமானப்படும் ராஜ்கபூர், அவர்கள் வசிக்கும் ஏரியாவில் ஒரு பெண் இன்ஸ்பெக்டரை (அனுயா) நியமித்து அவர் மூலம் ராதாரவியையும், அவரது இடதுகரமாக உள்ள சுதாகர் வசந்தையும், ஹரிகுமாரையும் என்கவுன்டரில் போட்டுத் தள்ள வழிவகை செய்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் அனுயா, ஹரிகுமாரிடம் காதல் நாடகம் நடத்தி, நல்லவள் போல் நடித்து ஹரிகுமாரின் மாமா சுதாகர் வசந்த், தந்தை ராதாரவி ஆகியோரை என்கவுன்டரில் போட்டுத் தள்ளுகிறார். இது தெரியாமல் காதல் மயக்கத்தில் இருக்கும் ஹரிகுமார் என்கவுன்டரிலிருந்து தப்பித்து, எப்படி தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.
ஹரிக்குமார் அதிரடி நாயகனாக ஆக்ஷனில் தூள் பரத்துகிறார். "தூத்துக்குடி" உள்ளிட்ட அவரது முந்தைய படங்களை காட்டிலும், நடை - உடை - பாவனை எல்லாவற்றிலும் நல்ல முன்னேற்றம். எதிரியின் சாராய உறலை எரித்து அடியாட்களை துவம்சம் செய்யும் ஆரம்ப காட்சியே அட்டகாசம்.
ஹீரோயின் அனுயா... அட்ரா சக்கை ரகம். சிவா மனசுல சக்தியில் குல்பி ஐஸாக கண்களுக்குள் குளித்தவர், காக்கி ட்ரெஸ்ஸில் ராக்கெட்டாக சிறுகிறார். முதிர்ச்சியான நடிப்பில் மொத்த கை தட்டலும் அவருக்குத்தான். ஆனால் காதலித்த பாவத்திற்கு ஒரு ராத்திரியை அனுபவிப்போமே என்ற அவரது லாஜிக்தான் உறுத்தல்.
கார்த்திகாவுக்கு அதிக வேலையில்லை. ஹரிகுமாருடன் பைக்கில் ஒட்டி உரசிச் செல்ல ஆசைப்பட்டு, அதுவும் அனுயா வந்த பிறகு நிராசையாகி விடுகிறது. ஆனந்த்பாபு கூலிக்கு கொலை செய்து, திருப்புமுனைக்கு உதவுகிறார்.
ஆலமரத்தானாக வரும் ராதாரவி, இதைவிட ஒரு சிறந்த நடிப்பை வேறு எந்த படத்திலும் கொடுத்ததில்லை. தன்னை தேடி போலீஸ் வருகிற ஒவ்வொரு காட்சியிலும் அவரது பார்வையும் கண்களும் வெளிப்படுத்தும் நடிப்பில் காட்டுகிற சங்கதிகள் ஏராளம். கடைசியில் அந்த என்கவுன்டர் காட்சியில் கூட விலகாத கம்பீரம் காட்டி சபாஷ் போட வைக்கிறார்.
"ஐ யாம் தாமஸ்" என என்ட்ரி ஆகும் ஒவ்வொரு சீனிலும் காமெடியில் எகிறும் சந்தானபாரதி, இப்போதுதானே உள்ளே போனோம் அதுக்குள்ள வெளியே வர்றோம் என உள்ளே வெளியே ஆடும்போது தியேட்டர் சிரிப்பால் அதகளமாகிறது.
"காதல்" தண்டபாணியின் பாய்ச்சல், ராஜ்கபூர், பொன்னம்பலத்தின் குள்ளநரித்தனம், சுதாகர் வசந்தின் கம்பீரம், சந்தானபாரதியின் நகைச்சுவை, சுடுகாட்டு மண்டையனின் (வினாயகம்) கலகலப்பு ஆகியவை ரசிக்கத்தக்கது.
இறைச்சி கூடத்தில் கட்ட பஞ்சாயத்து கொலைகள், கடத்தல் பிசினஸ் என்று கதைக்களமே வித்தியாசமாய் இருக்கிறது இயக்குனர் யுரேகாவின் முயற்சியால்.
ஹரிக்குமார், தன் அப்பாவைக் கொன்ற அனுயா பற்றி தெரியாமலேயே அவருடன் காதல் விளையாட்டுகளில் ஈடுபடும்போது, அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.
ஏழைகளுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்காகவே இந்த சமூக விரோத செயல்களை செய்வதாக ராதாரவி தரப்பிற்கும், தப்பிற்கும் நியாயம் கற்பித்திருப்பது மட்டும் என்னதான் சினிமாத்தனம் என்றாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல் நடுரோட்டில் முத்தம் கொடுத்தால் எந்தப் பெண்ணாவது காதலிப்பாளா? ஆனால் ஹீரோயின் அனுயா காதலிக்கிறார். இப்படி கதையில் சில இடங்களில் லாஜிக்தான் இடியோ இடியென இடிக்கிறது.
என்கவுன்டர் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். இவரின் கேமராவில் மதுரை மண் வாசம் படம் முழுவதும் வீசுகிறது. "கண்ணழகா கண்ணழகா...", "லந்துப் பண்ணுவோம்..." என்ற பாடலை முணு முணுக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜான்பீட்டர். எடிட்டர்தான் நீளத்தை குறைக்க மனசில்லாமல் விட்டிருக்கிறார்.
அதிரடி ஆக்ஷனில் காதலை புகுத்தி விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தியதற்காக இயக்குனர் யுரேகாவை பாராட்டலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Apr 09, 2020 10:39 am by Admin
» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
Sat Dec 05, 2009 11:15 am by AnnKristine
» No Air - Jordin Sparks
Sat Dec 05, 2009 11:12 am by AnnKristine
» Nail Polish Collection
Thu Nov 26, 2009 10:48 pm by olla86
» Know About Yourself
Thu Nov 26, 2009 10:36 pm by olla86
» You have to have brains....
Thu Nov 26, 2009 10:26 pm by olla86
» The problems with GUYS
Thu Nov 26, 2009 10:19 pm by olla86
» Wife with a lover
Thu Nov 26, 2009 10:09 pm by olla86
» PERANMAI NEW MOVIE
Sat Nov 21, 2009 5:13 am by J E N N Y