Log in
Latest topics
Social bookmarking
Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website
Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website
Support
சூரியன் சட்டக்கல்லூரி
Page 1 of 1
சூரியன் சட்டக்கல்லூரி
சட்டம் பயிலும் மாணவர்கள் சட்டத்தை எப்படி மதித்து நடக்க வேண்டும் என்பதை உணர்த்தும் படம்.
சட்டக்கல்லூரி மாணவர் தலைவரான கஜினி, சக மாணவர்களை நல்ல பழக்கவழக்கங்களுக்கு மாற்றி நல்ல மாணவன் என்று பெயர் வாங்குகிறார். கஜினியின் நடத்தைகள் அங்கு படிக்கும் மித்ராவுக்கு பிடிக்கிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
இச்சூழலில் சட்டம் படித்தே தீர வேண்டுமென எம்.பி.,யின் சிபாரிசுடன் சட்டக்கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறான் வில்லன் பவன். அவனால் அமைதி கெடுகிறது. கல்லூரி வளாகத்தில் கூட்டாளிகளுடன் ரவுடித்தனம் செய்கிறான். தட்டிக்கேட்பவர்களை அடியாட்களை ஏவி தாக்குகிறான். அவன் அக்கிரமங்கள் எல்லை மீற கஜினி தட்டிக்கேட்கிறார். வில்லன் பவனுக்கும், கஜினிக்குமிடையே மோதல் முற்றுகிறது. பவனை குற்றுயிரும் குலையுறுமாக அடித்து சாய்க்கிறார் கஜினி.
பவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் அவனைப்போல் தோற்றம் கொண்ட அண்ணன் ரவுடி அறிமுகமாகிறார். தம்பியை அடித்த கஜினியை பழிவாங்க பவன் தோற்றத்திலேயே கல்லூரிக்குள் நுழைந்து, நல்ல மாணவன்போல் நடிக்கிறான். இன்னொரு புறம் தம்பியை ஏவி கஜினி நண்பர்களை அடித்து நொறுக்க வைக்கிறான். கல்லூரி முதல்வரையும் அவமானப்படுத்துகிறான். கஜினி காதலையும் பிரிக்கிறான். ஆள் மாறாட்டத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இதையெல்லாம் பொறுத்து பொறுத்துப் பார்த்த கஜினி, ஒரு கட்டத்தில் இருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.
சட்டக் கல்லூரி மாணவரே குற்றவாளிக் கூண்டில் ஏறுகிறார். அவருக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் ராதாரவி வாதாடுகிறார். கஜினி விடுதலை ஆனாரா? தண்டனை பெற்றாரா என்பது க்ளைமாக்ஸ்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கஜினி சட்டக் கல்லூரி மாணவர் கேரக்டருக்கு பொருந்துகிறார். மாணவர்களை அன்பாக அரவணைத்துச் செல்லும்போதும், பனி மலையில் காதலியுடன் டூயட் பாடும்போதும் கச்சிதம். அடிதடியில் ஆக்ரோஷம் காட்டியிருப்பது பிரமாதம். சட்டத்தை மதிக்கும் மாணவராக க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு, நெகிழ வைக்கிறது.
புதுமுக நாயகி மித்ரா அழகான காதலியாய் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். என்ன? டான்ஸ்தான் வரமாட்டேங்குது!
ராதாரவி பிரின்ஸ்பால் கேரக்டருக்கும், எம்.எஸ்.பாஸ்கர் சட்டக்கல்லூரியில் வாஸ்தும், ஜோதிடமும் பேசும் பேராசிரியர் கேரக்டருக்கும் சரியான தேர்வு. கே.ஆர்.செல்வராஜ், வெங்கையா பாலன், ராஜலட்சுமி ஆகியோரின் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கஞ்சா கருப்பு, காதல் சுகுமார், ஷாம், ஆர்த்தி ஆகியோர் சரியான கடி.
இரட்டை வில்லனாக பவன் நடத்தும் திருவிளையாடல்கள் "சபாஷ்" போட வைக்கின்றன. கல்லூரிக்குள் நுழைந்து பிரின்ஸ்பலுக்கு ஆரத்தி எடுப்பது, திருநங்கை வேடத்தில் எக்காளம் செய்வது என அதகளம் பண்ணுகிறார்.
வில்லன் இரட்டையர்கள் என்று நாயகனுக்கு தெரிந்ததும், இவரும் பதிலுக்கு விளையாடப்போகிறார் என்று எதிர்பார்த்தால் பொசுக்கென்று போட்டுத் தள்ளி பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற கருவில் கல்லூரி முதல்வரே பொய்வாதம் செய்து அதை மீறுவது சறுக்கல்.
ஒற்றை ஆள் வில்லன் கூட்டத்தை ரவுண்ட் கட்டி அடிப்பது என்று ஆக்ஷன் கதைக்கே உரிய அழிச்சாட்டியமும் சினிமாத்தனமான விஷயங்களுக்கும் பஞ்சமில்லை.
அறிமுக நாயகன் என்று பாராமல் நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார். "தீக தீகனா..." என்று கானாவில் கலக்கி எடுத்திருக்கும் தேவா, உதித் நாராயணனின் வெள்ளிக்குரலில், "கலாய் கலாய் கலாய்க்கிறாய்..." என மெலடியிலும் அசத்தியிருக்கிறார்.
வழக்கமான கல்லூரி கலாட்டாக்கள் நிறைந்த படமென்றாலும், அதில் இரட்டை வில்லன் ட்விஸ்டை வைத்து விறுவிறுப்பான திரைக்கதையோடு ஆக்ஷனையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.பவன்
சட்டக்கல்லூரி மாணவர் தலைவரான கஜினி, சக மாணவர்களை நல்ல பழக்கவழக்கங்களுக்கு மாற்றி நல்ல மாணவன் என்று பெயர் வாங்குகிறார். கஜினியின் நடத்தைகள் அங்கு படிக்கும் மித்ராவுக்கு பிடிக்கிறது. இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
இச்சூழலில் சட்டம் படித்தே தீர வேண்டுமென எம்.பி.,யின் சிபாரிசுடன் சட்டக்கல்லூரியில் அடியெடுத்து வைக்கிறான் வில்லன் பவன். அவனால் அமைதி கெடுகிறது. கல்லூரி வளாகத்தில் கூட்டாளிகளுடன் ரவுடித்தனம் செய்கிறான். தட்டிக்கேட்பவர்களை அடியாட்களை ஏவி தாக்குகிறான். அவன் அக்கிரமங்கள் எல்லை மீற கஜினி தட்டிக்கேட்கிறார். வில்லன் பவனுக்கும், கஜினிக்குமிடையே மோதல் முற்றுகிறது. பவனை குற்றுயிரும் குலையுறுமாக அடித்து சாய்க்கிறார் கஜினி.
பவன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் அவனைப்போல் தோற்றம் கொண்ட அண்ணன் ரவுடி அறிமுகமாகிறார். தம்பியை அடித்த கஜினியை பழிவாங்க பவன் தோற்றத்திலேயே கல்லூரிக்குள் நுழைந்து, நல்ல மாணவன்போல் நடிக்கிறான். இன்னொரு புறம் தம்பியை ஏவி கஜினி நண்பர்களை அடித்து நொறுக்க வைக்கிறான். கல்லூரி முதல்வரையும் அவமானப்படுத்துகிறான். கஜினி காதலையும் பிரிக்கிறான். ஆள் மாறாட்டத்தில் குழப்பம் ஏற்படுகிறது. இதையெல்லாம் பொறுத்து பொறுத்துப் பார்த்த கஜினி, ஒரு கட்டத்தில் இருவரையும் போட்டுத் தள்ளுகிறார்.
சட்டக் கல்லூரி மாணவரே குற்றவாளிக் கூண்டில் ஏறுகிறார். அவருக்கு ஆதரவாக கல்லூரி முதல்வர் ராதாரவி வாதாடுகிறார். கஜினி விடுதலை ஆனாரா? தண்டனை பெற்றாரா என்பது க்ளைமாக்ஸ்.
நாயகனாக அறிமுகமாகியிருக்கும் கஜினி சட்டக் கல்லூரி மாணவர் கேரக்டருக்கு பொருந்துகிறார். மாணவர்களை அன்பாக அரவணைத்துச் செல்லும்போதும், பனி மலையில் காதலியுடன் டூயட் பாடும்போதும் கச்சிதம். அடிதடியில் ஆக்ரோஷம் காட்டியிருப்பது பிரமாதம். சட்டத்தை மதிக்கும் மாணவராக க்ளைமாக்சில் அவர் எடுக்கும் முடிவு, நெகிழ வைக்கிறது.
புதுமுக நாயகி மித்ரா அழகான காதலியாய் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். என்ன? டான்ஸ்தான் வரமாட்டேங்குது!
ராதாரவி பிரின்ஸ்பால் கேரக்டருக்கும், எம்.எஸ்.பாஸ்கர் சட்டக்கல்லூரியில் வாஸ்தும், ஜோதிடமும் பேசும் பேராசிரியர் கேரக்டருக்கும் சரியான தேர்வு. கே.ஆர்.செல்வராஜ், வெங்கையா பாலன், ராஜலட்சுமி ஆகியோரின் பாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் கஞ்சா கருப்பு, காதல் சுகுமார், ஷாம், ஆர்த்தி ஆகியோர் சரியான கடி.
இரட்டை வில்லனாக பவன் நடத்தும் திருவிளையாடல்கள் "சபாஷ்" போட வைக்கின்றன. கல்லூரிக்குள் நுழைந்து பிரின்ஸ்பலுக்கு ஆரத்தி எடுப்பது, திருநங்கை வேடத்தில் எக்காளம் செய்வது என அதகளம் பண்ணுகிறார்.
வில்லன் இரட்டையர்கள் என்று நாயகனுக்கு தெரிந்ததும், இவரும் பதிலுக்கு விளையாடப்போகிறார் என்று எதிர்பார்த்தால் பொசுக்கென்று போட்டுத் தள்ளி பார்வையாளர்களை ஏமாற்றுகிறார்.
சட்டக்கல்லூரி மாணவர்கள் சட்டத்தை மதிக்க வேண்டும் என்ற கருவில் கல்லூரி முதல்வரே பொய்வாதம் செய்து அதை மீறுவது சறுக்கல்.
ஒற்றை ஆள் வில்லன் கூட்டத்தை ரவுண்ட் கட்டி அடிப்பது என்று ஆக்ஷன் கதைக்கே உரிய அழிச்சாட்டியமும் சினிமாத்தனமான விஷயங்களுக்கும் பஞ்சமில்லை.
அறிமுக நாயகன் என்று பாராமல் நிறைய மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யு.கே.செந்தில்குமார். "தீக தீகனா..." என்று கானாவில் கலக்கி எடுத்திருக்கும் தேவா, உதித் நாராயணனின் வெள்ளிக்குரலில், "கலாய் கலாய் கலாய்க்கிறாய்..." என மெலடியிலும் அசத்தியிருக்கிறார்.
வழக்கமான கல்லூரி கலாட்டாக்கள் நிறைந்த படமென்றாலும், அதில் இரட்டை வில்லன் ட்விஸ்டை வைத்து விறுவிறுப்பான திரைக்கதையோடு ஆக்ஷனையும் கலந்து தந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.பவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Apr 09, 2020 10:39 am by Admin
» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
Sat Dec 05, 2009 11:15 am by AnnKristine
» No Air - Jordin Sparks
Sat Dec 05, 2009 11:12 am by AnnKristine
» Nail Polish Collection
Thu Nov 26, 2009 10:48 pm by olla86
» Know About Yourself
Thu Nov 26, 2009 10:36 pm by olla86
» You have to have brains....
Thu Nov 26, 2009 10:26 pm by olla86
» The problems with GUYS
Thu Nov 26, 2009 10:19 pm by olla86
» Wife with a lover
Thu Nov 26, 2009 10:09 pm by olla86
» PERANMAI NEW MOVIE
Sat Nov 21, 2009 5:13 am by J E N N Y