Log in
Latest topics
Social bookmarking
Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website
Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website
Support
ஜகன் மோகினி
Page 1 of 1
ஜகன் மோகினி
தன்னை கொன்றவர்களை ஆவியாக வந்து பழிவாங்கும் காதல் கதை.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளிவந்த ஜகன்மோகினியின் ரீமேக்தான் இந்த படம்.
பச்சைமலைத் தீவு மன்னன் நரசிம்மராஜுவின் ஒரே மகன் ராஜா. பட்டத்து இளவரசர். குருகுல வாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்புகிறார். வழியில் கொள்ளையர்கள் நடமாட்டம் பற்றி கேள்விப்பட்டு அவர்களை பிடிக்க மாறுவேடத்தில் சங்கு மலைத்தீவுக்கு வருகிறார். அந்த தீவின் இளவரசன் ரியாஸ்கானே அலைக்கள்ளன் பெயரில் கொள்ளைகள் புரிவது தெரிகிறது. உடனே அவரோடு மோதும் ராஜா, அலைக்கள்ளனை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
தீவில் வசிக்கும் நமிதா அழகில் மயங்கும் ராஜா, தான் இளவரசன் என்பதை மறைத்து நமிதாவிடம் பழகுகிறார். இருவரும் உயிருக்குயிராக காதலிக்கின்றனர். ஊருக்கு போய் பெற்றோர் சம்மதத்துடன் திரும்பி வந்து மணப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு நாட்டுக்கு திரும்புகிறார் ராஜா.
அங்கு மாமன் மகள் நிலாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. ராஜாவோ காதலி நமிதாவையே மணப்பேன் என பிடிவாதம் செய்கிறார். ராஜாவின் அப்பா நரசிம்மராஜு காதலை ஏற்பது போல் நடித்து தந்திரமாக ஆட்களை ஏவி நமிதாவை கொலை செய்வதோடு, நமிதா இன்னொருவனோடு நாட்டை விட்டு ஓடி விட்டார் என்று ராஜாவை நம்ப வைக்கிறார்.
பின்பு நிலாவை திருமணம் செய்ய அரை மனதோடு சம்மதிக்கிறார் ராஜா. ஆனால் திருமணத்தை தடுக்க மோகினி பேயாய் நாட்டுக்குள் வருகிறார் நமிதா. மற்றொரு புறம் மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ், ராஜாவை அம்மனுக்கு பலிகொடுத்து உலகை ஆளும் சக்தியை பெற அந்நாட்டுக்கு வருகிறார்.
மோகினியிடமும் மந்திரவாதியிடமும் சிக்கித் தவிக்கும் ராஜா, அதிலிருந்து விடுபட்டு நிலாவை எப்படி கைபிடிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.
முதல்காட்சியிலேயே, கடலில் இருந்து பனைமரம் உயரத்துக்கு தண்ர் உருவாக எழுந்து நாட்டுக்குள் நடந்து வரும் மோகினி உருவம், மரம் கைநீட்டி ஆட்களை பிடித்து கொல்லுவது, என மாயா ஜால வித்தைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் என்.கே.விஸ்வநாதன்.
மோகினி கேரக்டருக்கு நமிதா மிகப் பொருத்தமாக இருக்கிறார். வஞ்சகமில்லாமல் கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கும் நமிதா, ராஜா மீது காதல் வயப்பட்டு தண்ருக்குள் அநியாயமாக சாகடிக்கப்படும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.
இளவரசனாக வரும் ராஜா பாத்திரத்திற்கு அழுத்தமாய் பொருந்துகிறார். நமிதாவிடம் காதல் வயப்படுவதில் இனிமை காட்டுகிறார். நிலா கேரக்டரில் ஒட்டவில்லை. ராஜாவை காப்பாற்ற அம்மனிடம் வேண்டும் கடைசி காட்சியில் மட்டும் நிற்கிறார்.
கடலுக்குள் முத்துக்குளிக்கும் நமிதா, அபூர்வ முத்தை எடுத்து வந்ததும், ''உனக்கு ராஜகுமாரன்தான் கணவனாக வரப்போகிறான்'' என்று காதல் தூபம்போடும் ஜோதிலட்சுமி கதையில் மசாலா தூவுகிறார்.
தீவுகளுக்கெல்லாம் சக்கரவர்த்தி ஆக நினைக்கும் ரியாஸ்கான், அலைக்கள்ளன் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதும், அவரை வளைத்துபிடிக்க வரும் ராஜா, நமிதாவின் காதல் வலையில் சிக்கியதும் பிரச்சினைக்குள் நுழைகிறது கதை.
சுழன்றடிக்கும் புயலில் காவலாளிகள் பறப்பதும், மண்டபங்கள் இடிவதுமாக என்ன நடக்குமோ என்று பயமுறுத்தும் நமிதாவின் ஆவியை, ஒரு நொடிக்குள் கமண்டலத்துக்குள் அடைத்து கூல் செய்கிறார் கோட்டா சீனிவாசராவ். பின்பு அதிலிருந்து வெளிப்படும் நமிதா, மீண்டும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி அடுத்தடுத்த காட்சிகளுக்கு மின்னல் வேகம் கூட்டுகிறார்.
ராஜாவை அடைய வேண்டும் என்றால் அவரையும் கொன்று ஆவியாகத்தான் அடைய முடியும் என்று கூறும் நமிதா, ராஜாவை கடத்திச் சென்று கட்டில் பாடம் நடத்துவது கிக். வடிவேலுவுடன் நமிதா அடிக்கும் லூட்டி காமெடி வெடி. வெ.ஆ.மூர்த்தியும் காமெடிக்கு ஒத்து போகிறார்.
மோசக்கார மந்திரவாதியாக கோட்டா சீனிவாசராவ் மிரட்டுகிறார். நமிதாவை கொல்லும் அலெக்ஸ், கொள்ளைக்கார இளவரசன் ரியாஸ்கான் பாத்திரங்களும் வலுவானவை.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் இனிமை. கிராபிக்ஸ் மிரட்டல் கண்ணுக்குள் ஓவியமாகப் பதிகிறது. துண்டு துண்டாக வரும் காட்சிகள் பெரிய பாதிப்பையோ, பரபரப்பையோ ஏற்படுத்தாதது மைனஸ். திரைக்கதையை இன்னும் கூராக செதுக்கி இருக்கலாம். மந்திர தந்திர காட்சிகளுடன் மன்னர் காலத்தை கண்முன் நிறுத்தியதற்காக ஒரு பொழுதுபோக்கு படமாக ஜகன்மோகினியை ரசிக்கலாம்.
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளிவந்த ஜகன்மோகினியின் ரீமேக்தான் இந்த படம்.
பச்சைமலைத் தீவு மன்னன் நரசிம்மராஜுவின் ஒரே மகன் ராஜா. பட்டத்து இளவரசர். குருகுல வாசத்தை முடித்து விட்டு நாட்டுக்கு திரும்புகிறார். வழியில் கொள்ளையர்கள் நடமாட்டம் பற்றி கேள்விப்பட்டு அவர்களை பிடிக்க மாறுவேடத்தில் சங்கு மலைத்தீவுக்கு வருகிறார். அந்த தீவின் இளவரசன் ரியாஸ்கானே அலைக்கள்ளன் பெயரில் கொள்ளைகள் புரிவது தெரிகிறது. உடனே அவரோடு மோதும் ராஜா, அலைக்கள்ளனை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
தீவில் வசிக்கும் நமிதா அழகில் மயங்கும் ராஜா, தான் இளவரசன் என்பதை மறைத்து நமிதாவிடம் பழகுகிறார். இருவரும் உயிருக்குயிராக காதலிக்கின்றனர். ஊருக்கு போய் பெற்றோர் சம்மதத்துடன் திரும்பி வந்து மணப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு நாட்டுக்கு திரும்புகிறார் ராஜா.
அங்கு மாமன் மகள் நிலாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்கிறது. ராஜாவோ காதலி நமிதாவையே மணப்பேன் என பிடிவாதம் செய்கிறார். ராஜாவின் அப்பா நரசிம்மராஜு காதலை ஏற்பது போல் நடித்து தந்திரமாக ஆட்களை ஏவி நமிதாவை கொலை செய்வதோடு, நமிதா இன்னொருவனோடு நாட்டை விட்டு ஓடி விட்டார் என்று ராஜாவை நம்ப வைக்கிறார்.
பின்பு நிலாவை திருமணம் செய்ய அரை மனதோடு சம்மதிக்கிறார் ராஜா. ஆனால் திருமணத்தை தடுக்க மோகினி பேயாய் நாட்டுக்குள் வருகிறார் நமிதா. மற்றொரு புறம் மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ், ராஜாவை அம்மனுக்கு பலிகொடுத்து உலகை ஆளும் சக்தியை பெற அந்நாட்டுக்கு வருகிறார்.
மோகினியிடமும் மந்திரவாதியிடமும் சிக்கித் தவிக்கும் ராஜா, அதிலிருந்து விடுபட்டு நிலாவை எப்படி கைபிடிக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.
முதல்காட்சியிலேயே, கடலில் இருந்து பனைமரம் உயரத்துக்கு தண்ர் உருவாக எழுந்து நாட்டுக்குள் நடந்து வரும் மோகினி உருவம், மரம் கைநீட்டி ஆட்களை பிடித்து கொல்லுவது, என மாயா ஜால வித்தைகளில் கட்டிப்போடுகிறார் இயக்குனர் என்.கே.விஸ்வநாதன்.
மோகினி கேரக்டருக்கு நமிதா மிகப் பொருத்தமாக இருக்கிறார். வஞ்சகமில்லாமல் கவர்ச்சியை அள்ளி இறைத்திருக்கும் நமிதா, ராஜா மீது காதல் வயப்பட்டு தண்ருக்குள் அநியாயமாக சாகடிக்கப்படும்போது பரிதாபத்தை அள்ளுகிறார்.
இளவரசனாக வரும் ராஜா பாத்திரத்திற்கு அழுத்தமாய் பொருந்துகிறார். நமிதாவிடம் காதல் வயப்படுவதில் இனிமை காட்டுகிறார். நிலா கேரக்டரில் ஒட்டவில்லை. ராஜாவை காப்பாற்ற அம்மனிடம் வேண்டும் கடைசி காட்சியில் மட்டும் நிற்கிறார்.
கடலுக்குள் முத்துக்குளிக்கும் நமிதா, அபூர்வ முத்தை எடுத்து வந்ததும், ''உனக்கு ராஜகுமாரன்தான் கணவனாக வரப்போகிறான்'' என்று காதல் தூபம்போடும் ஜோதிலட்சுமி கதையில் மசாலா தூவுகிறார்.
தீவுகளுக்கெல்லாம் சக்கரவர்த்தி ஆக நினைக்கும் ரியாஸ்கான், அலைக்கள்ளன் என்ற பெயரில் கொள்ளை அடிப்பதும், அவரை வளைத்துபிடிக்க வரும் ராஜா, நமிதாவின் காதல் வலையில் சிக்கியதும் பிரச்சினைக்குள் நுழைகிறது கதை.
சுழன்றடிக்கும் புயலில் காவலாளிகள் பறப்பதும், மண்டபங்கள் இடிவதுமாக என்ன நடக்குமோ என்று பயமுறுத்தும் நமிதாவின் ஆவியை, ஒரு நொடிக்குள் கமண்டலத்துக்குள் அடைத்து கூல் செய்கிறார் கோட்டா சீனிவாசராவ். பின்பு அதிலிருந்து வெளிப்படும் நமிதா, மீண்டும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி அடுத்தடுத்த காட்சிகளுக்கு மின்னல் வேகம் கூட்டுகிறார்.
ராஜாவை அடைய வேண்டும் என்றால் அவரையும் கொன்று ஆவியாகத்தான் அடைய முடியும் என்று கூறும் நமிதா, ராஜாவை கடத்திச் சென்று கட்டில் பாடம் நடத்துவது கிக். வடிவேலுவுடன் நமிதா அடிக்கும் லூட்டி காமெடி வெடி. வெ.ஆ.மூர்த்தியும் காமெடிக்கு ஒத்து போகிறார்.
மோசக்கார மந்திரவாதியாக கோட்டா சீனிவாசராவ் மிரட்டுகிறார். நமிதாவை கொல்லும் அலெக்ஸ், கொள்ளைக்கார இளவரசன் ரியாஸ்கான் பாத்திரங்களும் வலுவானவை.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் இனிமை. கிராபிக்ஸ் மிரட்டல் கண்ணுக்குள் ஓவியமாகப் பதிகிறது. துண்டு துண்டாக வரும் காட்சிகள் பெரிய பாதிப்பையோ, பரபரப்பையோ ஏற்படுத்தாதது மைனஸ். திரைக்கதையை இன்னும் கூராக செதுக்கி இருக்கலாம். மந்திர தந்திர காட்சிகளுடன் மன்னர் காலத்தை கண்முன் நிறுத்தியதற்காக ஒரு பொழுதுபோக்கு படமாக ஜகன்மோகினியை ரசிக்கலாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
Thu Apr 09, 2020 10:39 am by Admin
» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
Sat Dec 05, 2009 11:15 am by AnnKristine
» No Air - Jordin Sparks
Sat Dec 05, 2009 11:12 am by AnnKristine
» Nail Polish Collection
Thu Nov 26, 2009 10:48 pm by olla86
» Know About Yourself
Thu Nov 26, 2009 10:36 pm by olla86
» You have to have brains....
Thu Nov 26, 2009 10:26 pm by olla86
» The problems with GUYS
Thu Nov 26, 2009 10:19 pm by olla86
» Wife with a lover
Thu Nov 26, 2009 10:09 pm by olla86
» PERANMAI NEW MOVIE
Sat Nov 21, 2009 5:13 am by J E N N Y