TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Latest topics
» tamil chat
வண்ணத்துப்பூச்சி EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

» Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
வண்ணத்துப்பூச்சி EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

» No Air - Jordin Sparks
வண்ணத்துப்பூச்சி EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

» Nail Polish Collection
வண்ணத்துப்பூச்சி EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

» Know About Yourself
வண்ணத்துப்பூச்சி EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

» You have to have brains....
வண்ணத்துப்பூச்சி EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

» The problems with GUYS
வண்ணத்துப்பூச்சி EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

» Wife with a lover
வண்ணத்துப்பூச்சி EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

» PERANMAI NEW MOVIE
வண்ணத்துப்பூச்சி EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 


Social bookmarking

Social bookmarking reddit      

Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

You Add
Support

வண்ணத்துப்பூச்சி

Go down

வண்ணத்துப்பூச்சி Empty வண்ணத்துப்பூச்சி

Post  TP Princess Wed Nov 18, 2009 10:49 am

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் படம்தான் வண்ணத்துப்பூச்சி.

பாசமற்ற ஹைடெக் பெற்றோருடன் வாழும் ஸ்ரீலட்சுமி, தாய்-தந்தை பாசத்துக்காக ஏங்குகிறாள். இந்த சூழ்நிலையில் கிராமத்தில் உள்ள தாத்தா வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு அவளுக்கு கிடைக்கிறது. தாத்தாவின் அன்பும் அங்குள்ள மக்களின் பாசமும் அவளைப் பரவசப்படுத்துகிறது. சில நாட்களுக்குப்பிறகு ஸ்ரீலட்சுமியை வீட்டுக்கு அழைத்து செல்ல பெற்றோர்கள் வருகின்றனர். ஆனால் அவர்களுடன் செல்ல மறுக்கிறாள். தாத்தாவை விட்டுப் பிரிய மனமில்லாமல், பெற்றோர் கொடுமைப்படுத்துவதாக கேஸ் போடுகிறாள் ஸ்ரீலட்சுமி. இந்த விந்தையான வழக்கை விசாரிக்கும் நீதிபதி ரேவதி என்ன தீர்ப்பு சொல்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

வண்ணத்துப்பூச்சியின் அழகியலோடு அறிமுகமாகிறாள் குழந்தை ஸ்ரீலட்சுமி. உடல் நலக்குறைவு ஏற்பட்ட பாலாசிங்குக்கு கசாயம் வைத்து கொடுப்பது... கூலி வேலை செய்து தாத்தாவுக்கு சட்டை வாங்கி கொடுப்பது... என நடிப்பில் குட்டி சாவித்திரியாக பின்னியிருக்கிறார். தாத்தா பாலாசிங் வழக்கம்போல மின்னுகிறார்.

சமூக அக்கறை கொண்ட நீதிபதி ரேவதியின் தீர்ப்பு உலகமே கவனிக்க வேண்டிய ஒன்று. பெற்றோராக வரும் சித்தார்த், மாதவி சர்மா இருவரும் அலட்டலான நடிப்பை அலட்டிக் கொள்ளாமல் செய்திருக்கிறார்கள்.

ரிட்டையர்டு ஆசிரியராக நடித்திருக்கும் ஓவியர் அமுதபாரதி, தனது ஓவியம் போலவே நிறைவாக செய்திருக்கிறார் தனது கேரக்டரை. அரிதாரம் பூசாத கிராமத்து மனிதர்கள் அழுத்தமான கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கின்றனர்.

தன்னை படிக்க வைத்து ஆளாக்கிய அப்பாவிடம் சித்தார்த் அவ்வளவு முரட்டு கோபம் காட்டுவது ஏன்? சின்ன பிளாஷ்பேக் காட்சியிலாவது விவரித்திருந்தால், நம்பும்படியாக இருந்திருக்கும். நாடகத்தனமான காட்சிகளையும், சற்று நீளமான வசனங்களையும் தவிர்த்திருக்கலாம்.

ரேஹான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காதுகளைக் கவர்கிறது. பி.எஸ்.தரன் ஒளிப்பதிவில் அழகிய கிராமம் நம் கண்முன் விரிகிறது.

குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்ளாமல், எந்திரத்தனமாக வாழும் நகர்ப்புற பெற்றோர்களுக்காக, கருத்து மிகுந்த கதையை உயிரோட்டத்துடன் படமாக்கிய இயக்குனர் அழகப்பன் சி.யை நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
TP Princess
TP Princess
Admin

Posts : 65
Points : 196
Reputation : 1
Join date : 2009-10-12
Age : 40

http://www.tamilprince.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum