TAMIL CHAT ROOM
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Log in

I forgot my password

Similar topics
    Latest topics
    » tamil chat
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptyThu Apr 09, 2020 10:39 am by Admin

    » Lo♥e is beautiful - Iru kangal Sollum - Kadhal Samrajyam- For Maha
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptySat Dec 05, 2009 11:15 am by AnnKristine

    » No Air - Jordin Sparks
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptySat Dec 05, 2009 11:12 am by AnnKristine

    » Nail Polish Collection
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptyThu Nov 26, 2009 10:48 pm by olla86

    » Know About Yourself
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptyThu Nov 26, 2009 10:36 pm by olla86

    » You have to have brains....
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptyThu Nov 26, 2009 10:26 pm by olla86

    » The problems with GUYS
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptyThu Nov 26, 2009 10:19 pm by olla86

    » Wife with a lover
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptyThu Nov 26, 2009 10:09 pm by olla86

    » PERANMAI NEW MOVIE
    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி EmptySat Nov 21, 2009 5:13 am by J E N N Y

    April 2024
    MonTueWedThuFriSatSun
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930     

    Calendar Calendar

    RSS feeds


    Yahoo! 
    MSN 
    AOL 
    Netvibes 
    Bloglines 


    Social bookmarking

    Social bookmarking reddit      

    Bookmark and share the address of Tamilprince on your social bookmarking website

    Bookmark and share the address of TAMIL CHAT ROOM on your social bookmarking website

    You Add
    Support

    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி

    Go down

    மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி Empty மதுரை TO தேனி வழி: ஆண்டிபட்டி

    Post  TP Princess Wed Nov 18, 2009 10:44 am

    ஒரே நாளில், ஒரு பஸ் பயணத்தில் நடக்கும் காதல்தான் கதை.

    ஆசிரியர் வேலைக்கு தேர்வாகும் நாயகன் அரவிந்த் வினோத், பணியில் சேர மதுரையில் இருந்து தேனி அருகில் இருக்கும் கிராமத்திற்கு பேருந்தில் வருகிறார். அப்போது அதே பேருந்தில் மதுரையில் படிப்பை முடித்துவிட்டு ஊருக்கு வருகிறார் நாயகி ஸ்ருத்திகாவும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்ட அரவிந்தின் நடவடிக்கைகள் ஸ்ருத்திகாவுக்கு பிடிக்கிறது. அரவிந்தும் ஸ்ருத்திகா மேல் காதல் வயப்பட்டு, அவரை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். இதற்கு பதில் ஏதும் கூறாமல் இடம் வந்ததும் இறங்கி வீட்டுக்கு செல்கிறார் ஸ்ருத்திகா.

    அவரை பின்தொடரும் அரவிந்த் ஸ்ருத்திகாவின் வீட்டை கண்டுபிடித்து, அவரின் பெற்றோரிடம் ஸ்ருத்திகாவை திருமணம் செய்ய விரும்புவதாக கூறுகிறார். உடனே பெற்றோர் ஆவேசமாகி அரவிந்தை வீட்டை விட்டு துரத்துகின்றனர். ஸ்ருத்திகாவின் தாய் மாமன்களும் அரவிந்தை அடிப்பதற்கு வரிந்துகட்டிக்கொண்டு பாய்கின்றனர்.

    இதனால் பெரிய ரகளையாகி பஞ்சாயத்துக்கு வருகிறது பிரச்சினை. பஞ்சாயத்தில் ஸ்ருத்திகா நல்ல பெண் என்றும் நான்தான் அவரை காதலித்தேன் என்றும் அரவிந்த் சொல்லுகிறார். தன்னால் காதலி களங்கப்படக்கூடாது என்று காதலை தியாகம் செய்து விட்டு புறப்படவும் தயாராகிறார். காதலர்கள் ஒன்றுசேர்ந்தார்களா? இல்லையா? என்பது விறுவிறுப்பான க்ளைமாக்ஸ்.

    கதாநாயகன் அரவிந்த் வினோத் பாத்திரத்தை உணர்ந்து பல இடங்களில் சாந்தமாகவும், சில இடங்களில் பாந்தமாகவும் நடித்து சபாஷ் போட வைக்கிறார். குறிப்பாக காதல் ஜோடிக்கு திருமணம் செய்து போலீசில் மாட்டும் அரவிந்த் வினோத்தையும் அவரது நண்பரையும் இரு போலீஸ்காரர்கள் பிடிக்க போகும் ஆரம்ப காட்சியே அமர்க்களம்.

    நாயகி ஸ்ருத்திகா, படம் முழுக்க சிரித்தபடியே வளைய வருகிறார். க்ளைமாக்ஸ் வரைக்கும் பொறுமையாகவே இருக்கும் இந்த பூ திடீரென்று பேச ஆரம்பிக்கும் போது தியேட்டரே அதிர்ச்சியாகிறது. க்ளைமாக்ஸில் இவர் பேசும் ஒவ்வொரு வசனங்களும் நெத்தியடி.

    டீக்கடைக்காரராக வரும் சிங்கமுத்து காமெடி, குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

    பஸ் கண்டக்டர் ரஜினியாக ராஜ்குமார், குமரிமுத்து, நெல்லை சிவா, முத்துக்காளை, திருமங்கலம் கலைராசு, சுருளிப்பட்டி சிவாஜி, சாந்தினி, முறைமாமன் ராசுக்குட்டி பிரகாஷ் உள்ளிட்ட பழைய, புதிய நடிகர்களுடன் சோலைமலை பேருந்தும் ஒரு பாத்திரமாக படம் முழுக்க பரவி இருப்பது பிரமிக்க வைக்கிறது.

    ஒன்றிரண்டு அறிமுக நடிகர்களை தவிர மற்றவர்கள் எல்லாருக்கும் மண் மணக்கும் மதுரைதான் போலிருக்கிறது. அச்சு பிறழாமல் வசனங்களை பொறிந்து தள்ளுகிறார்கள். நடிப்பும் அற்புதம்!

    ஸ்ருத்திகா ஊர் வந்ததும் அரவிந்த் பின் தொடர்கையில் என்ன நடக்குமோ, என்ற பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. அரவிந்த் பெண் கேட்டு விரட்டப்படுவது, மாமன்கள் மல்லுக்கட்டுவது போன்றவை விறுவிறுப்பான காட்சிகள்.

    சில காட்சிகளில் நாடகத்தனம் தெரிந்தாலும், சோலைமலை பேருந்தின் வேகம்போலே படமும் படுவேகமாக பயணிப்பதால் அது பெரிய குறையாக தெரியவில்லை.

    இதுநாள் வரை நம் சினிமாவில் காட்டப்படும் பஞ்சாயத்திற்கும், தெருவில் நடைபெறும் பஞ்சாயத்துகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக படம் பிடித்து காட்டியதற்காக இயக்குனர் ரதிபாலாவை பாராட்டலாம்.

    எஸ்.பி.எஸ். குகனின் கண்களை உறுத்தாத ஒளிப்பதிவும், சுருளிப்பட்டி சிவாஜியின் இயல்பான வசனமும், ஜேவியின் இனிமையான இசையும், கார்த்திக் சுப்பிரமணியத்தின் போரடிக்காத படத்தொகுப்பும் படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்றால் மிகையல்ல!

    இதுவரை மதுரையை கதைக்களமாக கொண்ட பெரும்பாலான படங்களில் அரிவாள், வெட்டுக்குத்து, ரத்தம் என்று வன்முறை காட்சிகள்தான் அதிகம் இடம்பெற்றிருக்கும். ஆனால் அதற்கு மாறாக ஒரு அழகான காதல் கதையை பேருந்து பயணத்திலே மிக யதார்த்தமாக சொல்லி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குனர் ரதிபாலா.
    TP Princess
    TP Princess
    Admin

    Posts : 65
    Points : 196
    Reputation : 1
    Join date : 2009-10-12
    Age : 40

    http://www.tamilprince.com

    Back to top Go down

    Back to top

    - Similar topics

     
    Permissions in this forum:
    You cannot reply to topics in this forum